| 3298.  | 
          காட்டு மாவ துரித்துரி போர்த்துடல் | 
         
         
          |   | 
          நாட்ட 
            மூன்றுடை யாயுரை செய்வனான் 
            வேட்டு வேள்விசெய் யாஅமண் கையரை 
            ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே.          1 | 
         
       
	
             1. 
        பொ-ரை: காட்டிலுள்ள யானையின் தோலை உரித்துப்  
        போர்த்திய இறைவனே! மூன்று கண்ணுடைய பெருமானே!  
        நல்வேள்வியைப் புரியாதவர்களாகிய சமணர்களுடன் நான் வாதம்  
        செய்து அவரை விரட்டுவதற்குத் திருவுளக்குறிப்பு யாது? உரை  
        செய்வாயாக! 
            கு-ரை: 
        காட்டுமா - காட்டிலுள்ள யானை. உரி - உரிவை;  
        தோல். உடல் போர்த்து - உடலிற் போர்த்து. நாட்டம் - கண்,  
        நாட்டம் மூன்றுடையாய் என்றது; ஏனையர்போல இருகண் அன்றி,  
        மேலும் ஒரு கண் (நெற்றிக்கண்) தீயோரை அழித்தற்கெனக்  
        கொண்டருளினாய். இது பொழுதும் அச்செயல் செயவேண்டும் என்ற  
        குறிப்பு. வன்றொண்டப் பெருந்தகையும் வேறு திருவுளம்பற்றியருளற்  
        குறிப்போடு மூன்று கண்ணுடையாய் அடியேன் கண் கொள்வதே  
        என்றமையும் காண்க. உரை செய்வன் - நான் விண்ணப்பம் செய்து  
        கொள்வேன். அது திருக்கடைக் காப்பில் கேட்ட  
        ஞானசம்பந்தன்என்றமையாலும் அறியப்படுகிறது. ஓட்டி வாதுசெய  
        - வாதுசெய்து ஓட்ட என விகுதி மாற்றிக் கூட்டுக.  
	 |