3304. |
பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழும் |
|
தொண்ட
ருக்கெளி யாய்திரு வாலவாய்
அண்ட னேயமண் கையரை வாதினில்
செண்ட டித்துள றத்திரு வுள்ளமே. 7 |
7.பொ-ரை:
தொன்றுதொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால்
உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு
எளியவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே! அண்டப்
பொருளாக விளங்கும் பெருமையுடையவரே! சமணர்களை வாதில்
வளைத்து அடித்து அழிக்க எண்ணுகிறேன். உமது திருவுளம் யாது?
கு-ரை:
பண்டு - தொன்று தொட்டு. அடித்தவம் - அடிப்பட்ட
தவம் பழவடியார் திருப்பல்லாண்டு. அண்டன் - தேவன். செண்டு
அடித்து -வளைத்து அடித்து.
|