| 
         
          | 3304. | பண்ட டித்தவத் தார்பயில் வாற்றொழும் |   
          |  | தொண்ட 
            ருக்கெளி யாய்திரு வாலவாய் அண்ட னேயமண் கையரை வாதினில்
 செண்ட டித்துள றத்திரு வுள்ளமே.         7
 |  
       
            7.பொ-ரை: 
        தொன்றுதொட்டுப் பலகாலும் பழகிய திறத்தால் உம்முடைய திருவடிகளையே வணங்கி வருகின்ற தொண்டர்களுக்கு
 எளியவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளுபவரே! அண்டப்
 பொருளாக விளங்கும் பெருமையுடையவரே! சமணர்களை வாதில்
 வளைத்து அடித்து அழிக்க எண்ணுகிறேன். உமது திருவுளம் யாது?
       கு-ரை: 
        பண்டு - தொன்று தொட்டு. அடித்தவம் - அடிப்பட்ட தவம் பழவடியார் திருப்பல்லாண்டு. அண்டன் - தேவன். செண்டு
 அடித்து -வளைத்து அடித்து.
 |