| 
         
          | 3306. | மாலும் நான்முக னும்மறி யாநெறி |   
          |  | ஆல வாயுறை 
            யும்மண்ண லேபணி மேலை வீடுண ராவெற்ற ரையரைச்
 சால வாதுசெ யத்திரு யுள்ளமே.           9
 |  
             9. 
        பொ-ரை: திருமாலும், பிரமனும் அறியாத தன்மையராய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானே!
 இறைவனுக்குத் தொண்டு செய்து உயர்ந்த வீட்டுநெறியினை
 அடைவதற்குரிய வழியை உணராது ஆடையின்றித் திரியும்
 சமணர்களோடு மிகவும் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?
      கு-ரை: 
        சால - முற்றிலும். வாது செயத் திருவுள்ளமே பணிப்பீராயின் என்பது கருத்து.
 |