| 
         
          | 3310. | விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர் |   
          |  | கதியு 
            மாங்கசி வாம்வசி யாற்றமா மதியு மாம்வலி யாமழ பாடியுள்
 நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.        2
 |  
       
            2. 
        பொ-ரை: திருமழபாடியில் வீற்றிருந்தருளும் கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானின் திருவடிகளே ஆன்மாக்களுக்கு
 விதியாவதும், அவ்விதியின் விளைவாவதும், ஒளியிற் கலப்பதாகிய
 முத்தி ஆவதுமாம். மனத்தைக் கசியவைத்துத் தன்வயப்படுத்தும்
 சிவ ஞானத்தை விளைவிக்கும் அத்தகைய திருவடிகளை
 வழிபடுவீர்களாக.
       கு-ரை: 
        மழபாடியுள் தலைவராகிய சிவபெருமானது திருவடியே ஆன்மாக்களுக்கு விதியாவதும். அவ்விதியின்
 விளைவாவதும், ஒளியிற் கலப்பதாகிய முத்தியாவதும், மனம்
 கசிவிப்பதும், அதனால் தன்வயமாகச் செய்வதும், சிவஞானமாகி
 விளைவதும், வலிய பற்றுக்கோடாவதும், அனைத்தும் ஆம்
 என்க. மதி - இங்குச் சிவஞானம், வலி - ஆகுபெயர்.
 நற்பாதம்:-நற்றாள் என்ற திருக்குறட் சொற்றொடர்க்குப்
 பரிமேலழகர் உரைத்ததுரைக்க.
 |