3313. |
நல்வி னைப்பய னான்மறை யின்பொருள் |
|
கல்வி
யாயக ருத்தனு ருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்து மதுபுக ழாகுமே. 5 |
5.
பொ-ரை: இறைவன் நல்வினையின் பயனாகியவன்.
நான்மறையின் பொருளாகியவன். கல்விப் பயனாகிய கருத்தன்.
உருத்திரனாகத் திகழ்பவன். அச்செல்வன் வீற்றிருந்தருளும்
திருமழபாடியைப் போற்றுங்கள். அது உமக்குப் புகழ் தரும்.
கு-ரை:
புல் + கு + இ = புல்கி. கு, சாரியை. ஏத்தும் அது -
துதித்தலாகிய அப்பணி.
|