| 
       
         
          | 3314. | நீடி னாருல குக்குயி ராய்நின்றான் |   
          |  | ஆடி னானெரி 
            கானிடை மாநடம் பாடி னாரிசை மாமழ பாடியை
 நாடி னார்க்கில்லை நல்குர வானவே.     6
 |  
             6. 
        பொ-ரை: பரந்த இவ்வுலகிற்கு இறைவன் உயிராய் விளங்குகின்றான். அப்பெருமான் சுடுகாட்டில் திருநடனம்
 ஆடுபவன். பத்தர்கள் இசையோடு போற்றிப் பாடத் திருமழபாடியில்
 இனிது வீற்றிருந்தருளும் அவனைச் சார்ந்து போற்றுபவர்கட்கு
 வறுமை இல்லை.
       கு-ரை: 
        நீடினார் உலகுக்கு - பரப்பான் மிக்க உலகத்திற்கு. மலர் தலை உலகம் என்றபடி. எரி - எரியும். கான்இடை -
 காட்டிடை. (மயானத்தில்) பாடின் ஆர் இசை - பாடுதலால்
 உண்டாகிய இனிய இசைமிக்க (திருமழபாடி).
 |