| 
         
          | 3317. | திருவி னாயக னுஞ்செழுந் தாமரை |   
          |  | மருவி 
            னானுந் தொழத்தழன் மாண்பமர் உருவி னானுறை யும்மழ பாடியைப்
 பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.      9
 |  
       
            9. 
        பொ-ரை: திருமகளின் நாயகனாகிய திருமாலும், செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருந்தருளும் பிரமனும், தொழுது போற்ற
 நெருப்பு மலையாக நின்ற மாண்புடைய வடிவினரான சிவபெருமான்
 வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் பரவிப் போற்றும் அன்பர்கள்
 பற்றிலிருந்து நீங்கியவராவர்.
       கு-ரை: 
        தழல் - நெருப்பாகிய. மாண்பு அமர் உருவினான் - பெருமை தங்கிய வடிவினை உடையவன். பரவினார் - துதிப்பவர்.
 |