| 
         
          | 3318. | நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர் |   
          |  | வலிய சொல்லினு மாமழ பாடியுள் ஒலிசெய் வார்கழ லான்திற முள்கவே
 மெலியு நம்முடன் மேல்வினை யானவே.     10
 |  
            10. 
        பொ-ரை: நன்மை அறியாத சமணர்களும், புத்தர்களும் பிறரை வருத்தும் சொற்களை வலிய உரைத்தாலும் அவற்றைப்
 பொருளாகக் கொள்ளாது, திருமழபாடியுள் வீரக்கழல்கள் ஒலிக்கத்
 திருநடனம் புரியும் சிவபெருமானின் அருட்செயலை நினைந்து
 போற்றினால் நம்மைப் பற்றியுள்ள வினையாவும் மெலிந்து அழியும்.
       கு-ரை: 
        நலியும் - பிறரை வருத்துகின்ற. நன்று அறியா - நீதியை அறியாத. உடல் மேல் வினை - உடலைப்பற்றிய பிழைகள்.
 |