| 
         
          | 3321. | நம்பு வாரவர் நாவி னவிற்றினால் |   
          |  | வம்பு 
            நாண்மலர் வார்மது வொப்பது செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
 நம்பன் நாமம் நமச்சி வாயவே.             2
 |  
       
             2. 
        பொ-ரை: சிவபெருமானின் திருவடிகளையே பற்றுக் கோடாக நம்பும் பக்தர்கள் திருவைந்தெழுத்தைத் தங்கள் நாவினால்
 உச்சரித்தால், நறுமணம் கமழும் நாள்மலர்களில் உள்ள தேன்போல
 இனிமை பயப்பது, எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம்
 போன்றது நம்முடைய சிவபெருமானின் திருநாமமான நமச்சிவாய
 என்னும் திருவைந்தெழுத்தே ஆகும்.
       கு-ரை: 
        நம்புவார் - விரும்புவார். நம்பும் மேவும் நசை யாகும்மே என்பது தொல்காப்பியம் (சொல். உரி) வம்புநாண்
 மலர்வார் மது -வாசனையுடைய புதிய மலரில் சொரிகின்ற தேன்.
 இம் மந்திரம் எல்லா உலகங்கட்கும் செம்பொன் திலகம் போன்றது.
 நம்பன் சிவ பெருமானுக்கு ஒரு பெயர். நம்பனே எங்கள் கோவே
 என்ற அப்பர் வாக்கால் அறிக.
 |