| 
         
          | 3322. | நெக்கு ளார்வ மிகப்பெரு கிந்நினைந் |   
          |  | தக்கு 
            மாலைகொ டங்கையி லெண்ணுவார் தக்க வானவ ராத்தகு விப்பது
 நக்கன் நாமம் நமச்சி வாயவே.             3
 |  
            3. 
        பொ-ரை: உள்ளம் நெகிழ்ந்து அன்புமிகப் பெருக சிவ பெருமானைச் சிந்தித்து, தமது அழகிய கையில் உருத்திராக்க
 மாலையைக் கொண்டு திருவைந்தெழுத்தை விதிப்படிச்
 செபிப்பவர்களைத் தேவர்களாக்கும் தகுதியைப் பெறும்படிச்
 செய்வது ஆடையில்லாத சிவபெருமானின் திருநாமமாகிய
 நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தேயாகும்.
       கு-ரை: 
        உள் நெக்கு - உள்ளம் நெகிழ்ந்து. ஆர்வம் - ஆசை. அங்கையில் - அழகிய கையிலே. அக்குமாலை கொடு -
 உருத்திராக்கச் செபமாலை கொண்டும். (அங்கையில் - விரல்
 இடையினாலும்). எண்ணுவார் - செபிக்கிறவர்களை.
 (தகுதியற்றவர்கள் ஆயினும்) தக்க - தகுதிவாய்ந்த. வானவராய் -
 தேவர்களாய். தகுவிப்பது - தகுதிபெறச் செய்வது. நக்கன்
 -ஆடையிலியாகிய சிவபெருமான். நாமம் நமச்சிவாயவே.
 |