| 3325.  | 
          மந்த ரம்மன பாவங்கண் மேவிய | 
         
         
          |   | 
          பந்த னையவர் தாமும் பகர்வரேல் 
		சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால் 
		நந்தி நாமம் நமச்சி வாயவே.     6 | 
         
       
	
       
            6. 
        பொ-ரை: மந்தர மலை போன்ற பாவங்களைச் செய்து  
        பாசங்களால் கட்டுண்டவர்களும், திருவைந்தெழுத்தை உச்சரிப்பார் 
        களேயானால் அவர்களது கொடியவினைகள் தீர்ந்து போகும்.  
        அவர்கட்குச் செல்வமும் பெருகும். அத்தகைய சிறப்புடையது நந்தி  
        என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமான நமச்சிவாய  
        என்பதாகும். 
            கு-ரை: 
        மந்தரம் அன - மந்தர மலைபோன்ற (பாவங்கள்).  
        மன்னிய - நிலை பெற்ற. பந்தனையவர் - பாசங்களால்  
        கட்டுண்டவர். அவர் தாமும் - அத்தகையோரும். பகர்வரேல் -  
        உச்சரிப்பார்களானால். வல்வினை சிந்தும் செல்வமும் மல்கும்  
        (பெருகும்) நந்தி - சிவபெருமான். பேர்நந்தி உந்தியின் மேலசைத்த  
        கச்சின் அழகு என்றார் அப்பர். முதலிரண்டடிக்குப் பாவங்கள்  
        பந்தனை இவையுடைய அத்தகையோரும் எனப் பொருள் 
        கோடலன்றிப் பாவங்கள் மன்னிய பாசங்களாற் கட்டுண்டவர்களும்  
        என ஓரிடத்திற்கு ஆக்குதலுமாம். மந்தரம் - பாற்கடல் கடைந்த  
        மலை. 
    
	 |