3326. நரக மேழ்புக நாடின ராயினும்
  உரைசெய் வாயின ராயி னுருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரதன் நாமம் நமச்சி வாயவே.     7

     7. பொ-ரை: எழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய
பாவிகளானாலும் திரவைந்தெழுத்பை் பக்தியோடு
உச்சரிப்பார்களேயானால், உருத்திர கணத்தாரோடு சேர்ந்து
வசிக்கும் பேற்றினைப் பெறுவர். அடியவர்கள் கேட்ட வரமெல்லாம்
தரும் சிவபெருமானின் திரு நாமமும் திருவைந்தெழுத்தே ஆகும்.

     கு-ரை: வரதன் - கேட்ட வரம் அனைத்தும் தருவோன்.
உருத்திரர்... புகுவித்தாரும் என்ற கருத்து உருத்திர பல்
கணத்தாருடன் கலந்து புகச் செய்யும். என்பர் - என்று
மெய்ஞ்ஞானிகள் கூறுவர்.