| 
         
          | 3330. | நந்தி நாமம் நமச்சிவா யவெனும் |   
          |  | சந்தை 
            யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யால்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
 பந்த பாசம் அறுக்கவல் லார்களே.           11
 |  
            11. 
        பொ-ரை: நந்தி என்னும் பெயருடைய சிவபெருமானின் திருநாமமாகிய நமச்சிவாய என்னும் திருவைந்தெழுத்தைச் சந்தம்
 மிகுந்த தமிழ் கொண்டு ஞானசம்பந்தன் அருளிச் செய்த
 இத்திருப்பதிகத்தைச் சிந்தை மகிழ ஓத வல்லவர்கள் பந்தபாசம்
 அறுக்க வல்லவர் ஆவர்.
 
       கு-ரை: 
        சந்தையால் - இசையோடு, பாடிய என ஒரு சொல் வருவிக்க.
 |