| 
         
          | 3333. | பரந்த நீலப் படரெரி வல்விடம் |   
          |  | கரந்த 
            கண்டத்தி னான்கரு தும்மிடம் சுரந்த மேதி துறைபடிந் தோடையில்
 நிரந்த தண்டலை நீணெறி காண்மினே.         3
 |  
       
            3. 
        பொ-ரை: விரிந்து பரந்த எரிபோன்ற கொடிய நஞ்சினைக் கண்டத்தில் தேக்கி நீலகண்டனாக இறைவன் வீற்றிருந்தருளும்
 இடமாவது, ஓடையில் எருமை படிந்து பால் சொரியும் வளமிக்க
 திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு அப்பெருமானை வணங்கி
 வழிபடுங்கள்.
       கு-ரை: 
        பரந்த - பரவிய. எரிவல்விடம் - கொதிக்கும் வலிய நஞ்சு. சுரந்த - பால்சுரந்த, (மடியினையுடைய.) மேதி - எருமைகள்.
 மேதி - பால்பகா அஃறிணைப்பெயர். சுரந்த மேதி - சினைவினை
 முதல் மேலேற்றப்பட்டது. சொரிந்த பால் ஓடையில். நிரந்த -
 பரவித் தோன்றும், தண்டலை நீணெறி என்க. (ஓடையில்) நிரந்த
 என்ற எச்சத்திற்குச் (சொரிந்த) பால் என்னும் வினைமுதல்
 வருவித்து உரைக்கப்பட்டது. காலுண்ட சேற்று மேதிக் கன்றுள்ளி
 கனைப்பச் சோர்ந்த பால் (கம்பராமாயணம் - நாட்டுப்படலம். 13)
 என்ற கவியின் கருத்துக் கொள்க. நிரந்த - இயல்பு பற்றிய கால
 வழுவமைதி.
 |