3335. |
இலங்கை வேந்த னிருபது தோளிற |
|
விலங்க லில்லடர்த் தான்விரும் பும்மிடம்
சலங்கொ ளிப்பி தரளமுஞ் சங்கமும்
நிலங்கொள் தண்டலை நீணெறி காண்மினே. 8 |
8.
பொ-ரை: இலங்கை மன்னனான இராவணனின் இருபது
தோள்களும் நெரியுமாறு கயிலைமலையின்கீழ் அடர்த்த இறைவன்
வீற்றிருந்தருளும் இடமாவது, நீரில் உள்ள சிப்பிகளும்,
முத்துக்களும், சங்குகளும் அலைகள் வாயிலாக அடித்துவரப்பட்டுச்
செல்வவளம் மிகுந்த திருத்தண்டலை நீள்நெறியாகும். அங்கு
வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.
கு-ரை:
விலங்கல் - கைலைமலை, ஆறு தனதாகக் கொண்ட
சிப்பி முத்து சங்கு, ஆகிய பொருள்களை, நிலம் தனதாகக்
கொள்ளும் வளம் பொருந்திய தண்டலை நீணெறி.
|