3339. |
செய்ய னேதிரு வாலவாய் மேவிய |
|
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய
ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே. 1 |
1.
பொ-ரை: நடுநிலைமை உடையவரே! திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள்
செய்வீராக. பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த
இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.
கு-ரை:
செய்யனே - நடுநிலைமையை யுடையானே.
ஒப்பநாடி அத்தக ஒறுத்தல் என்னும் குறிப்புப்போலும்.
|