3339. செய்ய னேதிரு வாலவாய் மேவிய
  ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.         1

     1. பொ-ரை: நடுநிலைமை உடையவரே! திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள்
செய்வீராக. பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த
இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.

     கு-ரை: செய்யனே - நடுநிலைமையை யுடையானே.
‘ஒப்பநாடி அத்தக ஒறுத்தல்’ என்னும் குறிப்புப்போலும்.