3340. |
சித்த னேதிரு வாலவாய் மேவிய |
|
அத்த
னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எத்த ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே. 2 |
1.
பொ-ரை: எல்லாம் வல்ல சித்தரே! திருஆலவாயில்
வீற்றிருந்தருளிய தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள்
செய்வீராக. ஏமாற்றித் திரிவோராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த
இந்நெருப்பு ஆருக மதத்தில் பக்தியுடையோனாகிய பாண்டிய
மன்னனைப் பற்றுவதாக.
கு-ரை:
சித்தன் - எல்லாம் வல்ல சித்தராகியவன். அத்தன்
- தலைவன். எத்தர் - ஏமாற்றுவோர். கொளுவும் சுடர் -
பற்றவைத்த தீ. பத்திமான் - (ஆருக மதத்திற்) பக்தியுடையவனாகிய
அரசன். தென்னன் - பாண்டியன்; தமிழ்நாட்டின் தென்பகுதியை
ஆள்பவன்.
|