3343. |
நண்ண லார்புர மூன்றெரி யாலவாய் |
|
அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பண்ணி யற்றமிழ்ப் பாண்டியற் காகவே. 5 |
5.
பொ-ரை: பகையசுரர்களின் திரிபுரங்களை எரித்த
திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! என்னை அஞ்சேல்
என்று அருள்செய்வீராக. சிந்திக்கும் திறனில்லாத சமணர்கள்
இம்மடத்தைக் கொளுத்திய நெருப்பானது பண்ணிசையோடு தமிழ்
வழங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.
கு-ரை:
எரி ஆலவாய் அண்ணல் - எரித்த ஆலவாயிலுள்ள
அண்ணல். எண்ணிலா - நினைத்தல் இல்லாத. பண் இயல்தமிழ்ப்
பாண்டியன் - பண்பு அமைந்த தமிழ்மொழி வழங்கும்
பாண்டிநாட்டரசன் என்பது. ஈற்றடியின் பொருள். பண்பு உணர்த்தும்
விகுதி குன்றியது. இதில் முதல் தொடருக்கு இசையோடு கூடிய
என்றுரைப்பினுமாம்.
|