| 
         
          | 3343. | நண்ண லார்புர மூன்றெரி யாலவாய் |   
          |  | அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
 பண்ணி யற்றமிழ்ப் பாண்டியற் காகவே.     5
 |  
            5. 
        பொ-ரை: பகையசுரர்களின் திரிபுரங்களை எரித்த திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! என்னை அஞ்சேல்
 என்று அருள்செய்வீராக. சிந்திக்கும் திறனில்லாத சமணர்கள்
 இம்மடத்தைக் கொளுத்திய நெருப்பானது பண்ணிசையோடு தமிழ்
 வழங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.
       கு-ரை: 
        எரி ஆலவாய் அண்ணல் - எரித்த ஆலவாயிலுள்ள அண்ணல். எண்ணிலா - நினைத்தல் இல்லாத. பண் இயல்தமிழ்ப்
 பாண்டியன் - பண்பு அமைந்த தமிழ்மொழி வழங்கும்
 பாண்டிநாட்டரசன் என்பது. ஈற்றடியின் பொருள். பண்பு உணர்த்தும்
 விகுதி குன்றியது. இதில் முதல் தொடருக்கு இசையோடு கூடிய
 என்றுரைப்பினுமாம்.
 |