3352. குற்றநீ குணங்கணீ கூடலால வாயிலாய்
  சுற்றநீ பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை
முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.    3

     3. பொ-ரை: திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இறைவரே!
நீரே உயிர்க்குள் உயிராய் ஒன்றி உடனிருந்து இயக்குகிறீர்.
ஆதலால் எனது குற்றமும் நீரே; குணமும் நீரே; என் சுற்றமும்
தவைவரும் நீரே. என்னுள்ளிருக்கும் அறியாமையாகிய இருளை
நீக்கி அறிவொளி தொடர்ந்தொளிரச் செய்யும் சோதி நீரே.
பொதுவும், சிறப்புமாகிய வேத, ஆகம நூல்களில் கருத்தும் நீரே.
நூல்களில் உட்பொருளை அடியேன் நனிவிளங்கச் செய்பவரும்,
அவ்விளக்கத்தால் இன்பம் அடையச் செய்பவரும் நீரே. உம்
திருமுன் அடியேன் இவ்வாறு உம்மைப் புகழ்வது உண்மையேயன்றி
வெறும் புகழ்ச்சியன்று.

     கு-ரை: அருத்தம் - பொருள். முன்புகழ்ந்து உரைப்பது -
முன்னால் புகழ்ந்து சொல்வது. என்ை(ன)? எத்தகையது? (முகமன்
பாற்படும்.)