3358.
|
தாவணவ்
விடையினாய் தலைமையாக நாடொறும் |
|
கோவணவ்
வுடையினாய் கூடலால வாயிலாய்
தீவணம் மலர்மிசைத் திசைமுகனு மாலுநின்
தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே. 9 |
9.
பொ-ரை: தாவிச் செல்லும்இடபத்தை வாகனமாக
உடையவரே! தலைமை உடையவராய் நாடொறும் கோவண
ஆடையோடு கூடல் ஆலவாயில் வீற்றிருந்து அருள் செய்பவரே!
நெருப்புப் போன்று செந்நிறமான தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும், திருமாலும், உம் முழுமுதல் தன்மையை
அறியாதவர்களாய்க் கலக்கம் உற்றார்கள்.
கு-ரை:
தாவண்ணம் - தாவும் தன்மை. தீவணம் மலர் -
செந்தாமரை மலருக்குத் தீவணம் நிறத்தால் உவமை. எரியாத
தாமரை மேல் இயங்கினாலும் (அப்பர்) எரியகைந்ததன்ன
தாமரை நாப்பண் எனவரும் புறநானூற்றாலும் அறிக.
தூவணம் - பற்றுக்
கோடாம் தன்மை. (புறம்)
|