| 
         
          | 3381. | மாலா 
            யவனும் மறைவல்ல நான்மு கனும் |   
          |  | பாலாய 
            தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக் காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
 ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.     10
 |        10. 
        பொ-ரை: திருமாலும், நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும், பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண
 விரும்பி, பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால
 விடத்தை உண்டு, தேவர்களைக் காத்து அருள்செய்தவர்
 சிவபெருமான்.
       கு-ரை: 
        மாலாயவனும்...செய்ததாமே என்றது:- திருமால் முதலிய தேவர்கள் இறந்தொழியாமைப் பொருட்டு இறைவன்
 நஞ்சுண்டு காத்த கருணைத்திறம் கூறியபடி.
 |