3381. மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
  பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.     10

     10. பொ-ரை: திருமாலும், நான்மறைகளையும் நன்கு கற்ற
பிரமனும், பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண
விரும்பி, பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால
விடத்தை உண்டு, தேவர்களைக் காத்து அருள்செய்தவர்
சிவபெருமான்.

     கு-ரை: மாலாயவனும்...செய்ததாமே என்றது:- திருமால்
முதலிய தேவர்கள் இறந்தொழியாமைப் பொருட்டு இறைவன்
நஞ்சுண்டு காத்த கருணைத்திறம் கூறியபடி.