3389. |
நீதி நின்னையல்லா னெறியாதும் |
|
நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்றலை
யொன்றினையும்
சேதீ சேதமில்லாத் திருவான்மி
யூருறையும்
ஆதீ யுன்னையல்லா லடையாதென
தாதரவே. 6 |
6.
பொ-ரை: நீதிவடிவாயுள்ளவனே! உன்னையே
நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுதற்குரிய நெறி வேறொன்றை
அறிந்திலேன். நால்வேதங்களை அருளிச் செய்தவனே! பிரமன்
தலை ஒன்றை நகத்தால் கிள்ளியவனே! எத்தகைய குறைவுமின்றி
வளம் பொருந்திய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும்
ஆதிமூர்த்தியே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும்
ஆதரவாக அடையாது.
கு-ரை:
நீதிவடிவாயுள்ளவனே, உன்னையே
நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுவதற்குரிய முறை எதனையும்
நினைந்தறியேன் என்பது முதலடிக்குப் பொருள். ஓதிநான்மறைகள்
- நான்கு வேதங்களையும் ஓதினவனே, சேதீ - சேதித்தவனே,
சேதித்தல் - வெட்டுதல், (நகத்தாற்கிள்ளினமை.) ஆதீ - முதல்வனே.
|