| 
         
          | 3397. | பாரிடம் விண்ணுமெங்கும் பயி னஞ்சு |   
          |  | பரந்துமிண்டப் பேரிடர்த் தேவர்கணம் பெரு மானிது
 காவெனலும்
 ஓரிடத் தேகரந்தங் குமை நங்கையொ
 டும்முடனே
 பேரிட மாகக்கொண்ட பிர மாபுரம்
 பேணுமினே.                       4
 |  
             4. 
        பொ-ரை: நிலவுலகிலும், விண்ணுலகிலும் எங்கும் பயின்ற விடமானது பரவிப் பெருக, அதனால் பெருந்துன்பத்திற்குட்பட்ட
 தேவர்கள் அனைவரும், பெருமானே! காப்பாற்றுவீர்களாக என்று
 பிரார்த்திக்க, அவ்விடத்தைக் கண்டத்தில் கரந்து அருள்புரிந்த
 அப்பெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற பெருமை
 மிகுந்த திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி
 வழிபடுவீர்களாக.
       கு-ரை: 
        மிண்ட - அதிகரிக்க. இதுகா - இதனின்றும் காத்தருள்க. ஐந்தனுருபுத்தொகை. ஓரிடத்தே - கண்டமாகிய
 ஓரிடத்தே, கரந்தான்.
 |