| 
         
          | 3399. | பெற்றவன் முப்புரங்கள் பிழை யாவண்ணம் |   
          |  | வாளியினாற் செற்றவன் செஞ்சடையிற் றிகழ் கங்கை
 தனைத்தரித்திட்
 டொற்றை விடையினனா யுமை நங்கையொ
 டும்முடனே
 பெற்றிமை யாலிருந்தான் பிர மாபுரம்
 பேணுமினே.                      6
 |        6. 
        பொ-ரை: இறைவன் திரிபுர அசுரர்கள் தவத்தினால் பெற்ற வலிய மூன்றுபுரங்களையும் தப்பாவண்ணம் ஓரம்பினால்
 அழித்தவன். சிவந்த சடையில் அழகிய கங்கையைத் தரித்தவன்.
 ஒற்றை இடபவாகனம் ஏறினவன். உமாதேவியோடு அவன்
 வீற்றிருந்தருளும் பெருமையுடைய திருப்பிரமாபுரம் என்னும்
 திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக!
       கு-ரை: 
        பெற்றவன் - இடபவாகனத்தையுடையவன். பெற்றொன்றேறி என வருதலும் காண்க. (தி.2. ப.80. பா.8.)
 பெற்றிமையால் - தன்மையோடும்.
 |