3402. ஞால மளித்தவனும் மரி யும்மடி
       யோடுமுடி
காலம் பலசெலவுங் கண்டி லாமையி
     னாற்கதறி
ஓல மிடவருளி யுமை நங்கையொ
     டும்முடனாய்
ஏல விருந்தபிரான் பிர மாபுர
     மேத்துமினே.                       9

     9. பொ-ரை: இப்பூவுலகைப் படைத்த பிரமனும்,
திருமாலும்,பலகாலம் இறைவனுடைய அடிமுடியைத் தேடி அலைந்து
காண முடியாது கதறி ஓலமிட அவர்கட்கு அருள்புரிந்த அச்சிவ
பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும்
திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.

     கு-ரை: ஞாலம் - பூமி, அளித்தவன் - படைத்தவன், ஏல -
பொருத்தமாக, ஏத்து மின் - துதியுங்கள்.