| 
         
          | 3402. | ஞால மளித்தவனும் மரி யும்மடி |   
          |  | யோடுமுடி காலம் பலசெலவுங் கண்டி லாமையி
 னாற்கதறி
 ஓல மிடவருளி யுமை நங்கையொ
 டும்முடனாய்
 ஏல விருந்தபிரான் பிர மாபுர
 மேத்துமினே.                       9
 |  
            9. 
        பொ-ரை: இப்பூவுலகைப் படைத்த பிரமனும், திருமாலும்,பலகாலம் இறைவனுடைய அடிமுடியைத் தேடி அலைந்து
 காண முடியாது கதறி ஓலமிட அவர்கட்கு அருள்புரிந்த அச்சிவ
 பெருமான் உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும்
 திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
       கு-ரை: 
        ஞாலம் - பூமி, அளித்தவன் - படைத்தவன், ஏல - பொருத்தமாக, ஏத்து மின் - துதியுங்கள்.
 |