3418. |
நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந் |
|
தேறதேறி
மானன நோக்கிதன்னோ டுட னாவது
மாண்பதுவே தானலங்
கொண்டுமேகந் தவ ழும்பொழிற்
சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்தவெம்மா னயவந்தி
யமர்ந்தவனே. 3
|
3.
பொ-ரை: முப்புரிநூல் அணிந்த திருமார்பில்
திருவெண்ணீற்றினை அணிந்து, இடப வாகனத்திலேறி, மான்
போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியை உடனாகக்
கொண்டு விளங்குபவன் சிவபெருமான். மேகத்தைத் தொடும்படி
உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை என்னும்
திருத்தலத்தில் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால்
திருமுழுக் காட்டப்படும் சிவபெருமான் திருஅயவந்தி என்னும்
திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
நூல் நலம் - நல்லபுரி நூல். நுகர் - பூசிய நீறு.
மாண்பு அதுவே - பெருமையாமா? நோக்கி - கண்களையுடையவள்.
ஆன்நலம் - பசுவினிடம் கிடைக்கும் பஞ்சகவ்வியத்தை. தோய்ந்த
- திருமஞ்சனம் கொண்டருளிய. எம்மான் - எமது தலைவனே.
|