3447. |
மூடிய சீவரத்தர் முதிர் பிண்டிய |
|
ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ் சப்படுந்
தேவர்பிரான்
பாடிய நான்மறையான் பலிக் கென்றுபல்
வீதிதொறும்
வாடிய வெண்டலைகொண் டுழல் வானிடம்
வக்கரையே. 10 |
10.
பொ-ரை: காவியாடை போர்த்திய புத்தர்களும், அசோக
மரத்தை வணங்கும் சமணர்களும், தேடுகின்ற தேவர்களால்
வணங்கப் படுகின்ற தேவர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமான்
நான்மறைகளை அருளிச்செய்து, பல வீதிகள்தோறும் சென்று
உலர்ந்த பிரம கபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவான்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
பிண்டியர் - அசோக மரத்திற் பற்று உடையவர்கள்.
|