| 
         
          | 3459. | திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை |   
          |  | மேயவனைத் தண்ணம ரும்பொழில்சூழ் தரு சண்பையர்
 தந்தலைவன்
 எண்ணமர் பல்கலையா னிசை ஞானசம்
 பந்தன்சொன்ன
 பண்ணமர் பாடல்வல்லார் வினை யாயின
 பற்றறுமே.                       11
 |       11. 
        பொ-ரை: உறுதியான மதில்களையுடைய திருவெண்டுறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றி,
 குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த சண்பை எனப்படும்
 சீகாழியில் அவதரித்த தலைவனான, பலகலைகளில் வல்ல
 ஞானசம்பந்தன் அருளிய இப்பண்ணோடு கூடிய திருப்பதிகத்தை
 ஓத வல்லவர்களின் வினையாவும் நீங்கும்.
       கு-ரை: 
        திண்(ண)ம் அமரும் புரிசை - உறுதி தங்கிய மதில். திண்மை - திண் என்று ஆயது. ஈறுபோதல் என்னும்விதி. சூழ்
 தரு - சூழ்ந்த. எண் அமர் - பாராட்டுதல் அமைந்த பல்கலை.
 இசை - இசைத்தமிழால்.
 |