| 
         
          | 3498. | புற்றிடை வாளரவினொடு புனைகொன்றை |   
          |  | மதமத்தம் எற்றொழியா வலைபுனலோ டிளமதிய
 மேந்துசடைப்
 பெற்றுடையா ரொருபாகம் பெண்ணுடையார்
 கண்ணமரும்
 நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக்
 காட்டாரே.                         7
 |        7. 
        பொ-ரை: சிவபெருமான் புற்றில் வாழும் ஒளிமிக்க பாம்பையும், கொன்றை மலரையும், ஊமத்தை மலரையும் அணிந்து,
 ஓய்தல் இல்லாது அலைவீசும் கங்கையோடு, பிறைச்சந்திரனையும்
 தாங்கிய சடையையுடையவர். தம் திருமேனியில் ஒருபாகமாக
 உமாதேவியைக் கொண்டவர். நெற்றிக்கண்ணையுடையவர்.
 அப்பெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில்
 வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        புற்று இடை - புற்றில் உள்ள. வாள் - ஒளியையுடைய. அரவினொடு - பாம்பினோடும். புனை - அணிந்த.
 மதம் வாசனையையுடைய. மத்தம் - பொன்னூமத்தை (இவற்றோடும்)
 எற்று ஒழியா - மோதுதல் ஒழியாத. அலை - அலைவீசும்.
 புனலோடு - கங்கைநீரோடு. இளம்மதியம் - பிறைச் சந்திரனையும்.
 ஏந்து - தாங்கிய. சடைபெற்று உடையார் - சடையாகிய
 பெருக்கத்தை யுடையவர்.
 |