3554. அவ்வதிசை யாருமடி யாருமுள
       ராகவருள் செய்தவர்கண்மேல்
எவ்வமற வைகலு மிரங்கியெரி
     யாடுமெம தீசனிடமாம்
கவ்வையொடு காவிரி கலந்துவரு
     தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கிமண
     நாறுமயி லாடுருறையே.              7

     7. பொ-ரை: அந்தந்தத் திக்குகளிலுள்ள எல்லா
அடியவர்களும் நல்ல வண்ணம் வாழும் பொருட்டு அருள்செய்து,
அவர்களுடைய வினைகள். நீங்க நாள்தோறும் இரங்கித் தீயேந்தி
ஆடுகின்ற எம் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்,
ஆரவாரத் தோடு வரும் காவிரி - மணமிக்க மல்லிகை, மாரவி
முதலான மலர்களைத் தள்ளிவர நறுமணம் கமழும் அதன்
தென்கரையிலுள்ள திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: அவ்வதிசையாரும் - (அவ். அ. திசையாரும்).
அந்தந்தத் திக்குகளில் உள்ள ஏனைமாந்தரும். உளர் ஆக -
நன்றாக. வாழும் பொருட்டு, அவர்கள்பால் உள்ள. எவ்வம்அற
- வினைகள் நீங்க. வைகலும் - நாடோறும். இரங்ககி அருள்செய்து,
எரி ஆடும் - அக்கினியில் ஆடுகின்ற. எமது ஈசன் இடமாம்.
கவ்வையொடு கலந்து காவிரி வரும் தென்கரையில் கமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறை எனக்
கூட்டுக. கவ்வை - ஆரவாரம். மவ்வல் - முல்லை. மாதவி - ஒரு
வகை மரவிசேடம். மடங்கி - கலந்து நிரந்து - பரவி. அவ்வத்திசை
- சந்தம் நோக்கி வலிமிகாதாயிற்று.