3691. |
பல்வளரு
நாகமரை யார்த்துவரை |
|
மங்கையொரு
பாகம்
மல்வளர்பு யத்திலணை வித்துமகி
ழும்பரம னிடமாம்
சொல்வளரி சைக்கிளவி பாடிமட
வார்நடம தாடிச்
செல்வமறை யோர்கண்முறை யேத்தவள
ருந்திருந லூரே. 2 |
2.
பொரை: நச்சுப்பல்லுடைய நாகத்தை இடுப்பிலே கச்சாகக்
கட்டி, மலைமங்கையாகிய உமாதேவியைத் தன் வலிமையான
தோளின் இடப்பாகத்தில் அணைத்து மகிழும் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, மகளிர் பொருட்செறிவுடைய
பாடல்களைப் பாடி, அவற்றிற்கேற்ப நடனமாடுவதும், வேதம் ஓத
வல்ல அந்தணர்கள் நியதிப்படி போற்றி வழிபடுவதும் ஆகிய
புகழ்வளரும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
வளர் இசை - இசைவளரும். சொல்...கிளவி -
சொற்களாலாகிய சாகித்தியங்களை (இதனை 'உரு' என்பர்
இசைநூலார், இப்பொழுது 'உருப்படி' எனக் குழுஉக் குறியாய் வழங்கி வருகிறது.) வளரும் -
புகழ் வளரும் திருநல்லூர்.
|