3697. |
ஏறுபுகழ்
பெற்றதெனி லங்கையவர் |
|
கோனையரு
வரையில்
சீறியவ னுக்கருளு மெங்கள்சிவ
லோகனிட மாகும்
கூறுமடி யார்களிசை பாடிவலம்
வந்தயரு மருவிச்
சேறுகமரானவழி யத்திகழ்த
ருந்திருந லூரே. 8 |
8.
பொ-ரை: மிக்க புகழ் பெற்ற தென் இலங்கை மன்னனான
இராவணனைக் கயிலைமலையின் கீழ் நெருக்கி அடர்த்துப் பின்னர்
அவனுக்கு நீண்ட வாழ்நாளும், வெற்றிதரும் வீரவாளும் அளித்து
அருள்செய்தவர் சிவலோக நாதரான சிவபெருமான் ஆவார்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, அடியார்கள் இசைபாடி
வலம் வரும்பொழுது, பக்தியால் அவர்கள் கண்களிலிருந்து
பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர் அருவியெனப் பாய்ந்து
அருகிலுள்ள நிலவெடிப்புகளில் விழ, வெடிப்புக்கள் நீங்கி நிலம்
சேறாகத் திகழும் திருநல்லூர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
ஏறுபுகழ் - மிக்க புகழ்பெற்ற. தென் இலங்கையர்.
கோனை - அரசனை, சீறி -முதற்கண்கோபித்து, (பிழைக்கிரங்கி
அவன் வேண்ட)அவனுக்கு அருளும். அடியார்கள் இசைபாடி வலம்
வருகையில், அயரும் -(அவர்கள் கண்களினின்றும்) சோரும். அருவி
- ஆனந்தக் கண்ணீரருவியானது (அருகிலுள்ள) நிலவெடிப்புக்கள்
எல்லாம் அழியத் திகழ்தரும் - விளங்கும் திருநல்லூர். மிகையுயர்வு
நவிற்சியணி.
|