|
| 3752.
|
தெண்கடல்
புடையணி நெடுமதி லிலங்கையர் |
| |
தலைவனைப்
பண்பட வரைதனி லடர்செய்த பைங்கழல்
வடிவினர்
திண்கட
லடைபுனல் திகழ்சடை புகுவதொர்
சேர்வினார்
விண்கடல் விடமலி யடிகள்தம் வளநகர்
விளமரே. 8
|
8. பொ-ரை: தெளிவான
நீரையுடைய கடல்சூழ்ந்த, அழகிய
நீண்ட மதில்களையுடைய இலங்கை அரசனான இராவணன் பண்
படையும்படி, கயிலைமலையின் கீழ் அடர்த்த கழலணிந்த
திருவடிகளையுடையவர் சிவபெருமான். கடலையடையும் கங்கையை,
சடையில் தாங்கியவர். விண்ணுலகிலுள்ள பரந்த பாற்கடலில்
தோன்றிய விடத்தைத் தேக்கிய கண்டத்தர். இத்தகைய தலைவரான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் வளமை பொருந்திய நகர் திரு
விளமர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
தெண் கடல் - தெளிவான நீரையுடைய கடல். புடை
அணி - சுற்றிய, இலங்கையர் தலைவனை. பண்பட அடர் செய்த -
நன்றாக அடர்த்த. கழல் வடிவினர் - கழலோடு கூடிய
வடிவையுடையவர். கடல் அடைபுனல் - கடலையடையும் (கங்கை) நீர்.
திகழ்சடை புகுவது ஓர் சேர்வினார் - விளங்கும் சடையிற்
புகுவதாகிய சேர்க்கையையுடையவர். விண் - விண்ணை அளாவிப்
பரவிய (விடம்) கடல். விடம் - விடக்கறை. மலி - (கண்டத்தின்கண்)
பொருந்திய அடிகள்.
|