3767. |
ஓங்கிமே
லுழிதரு மொலிபுனற் |
|
கங்கையை
யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல
னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம்
புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 1 |
1.
பொ-ரை: சிவபெருமான், மேன்மேலும் ஓங்கி எழுந்து
ஓசையுடன் பெருக்கெடுத்து வந்த கங்கையாற்றின் வெள்ளத்தை ஒரு
சடையில் தாங்கியவர். இடுகின்ற பிச்சையை ஏற்கத் தலை
யோட்டையே பாத்திரமாகக் கொண்ட தலைவர். முறைப்படி,
பகற்காலத்தில் தங்குமிடமாகப் பசுமையான சோலைகள் சூழ்ந்ததும்,
நீர்ச்செழிப்பு மிக்கதுமான திருத்துருத்தி என்னும் திருத்தலத்தை
உடையவர். அப்பெருமானே இரவில் திருவேள்விக்குடிஎன்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
மேலும் மேலும் ஓங்கிப் பரவிவந்த ஓசையையுடைய
கங்கை நீரை ஒரு சடைமேல் தாங்கினவர், உலகையே அழிப்பது
போல் பெருக்கெடுத்த நீரை, ஒரு சடையில் தாங்கினான் என ஓர்
நயம். இடுபலி - இடும் பிச்சையைத் தலைகலனாக ஏற்கும், தம்
பெருமான், தம்பிரான்,
தம்மடிகள் - என்பன ஒரு பொருளன; தாமே
தமக்குத் தலைவர் என்பது. பாங்கினால் - முறைப்படி, பகற்
காலத்துத் தங்கும் இடம் நீர்வளம் மிக்க துருத்தியாக உடையவர்,
இரவுக் காலத்துத் தங்குவது திருவேள்விக் குடியாம். பாங்கினால் -
என்றது, பகற் காலத்துத் திருத்துருத்தியிலும், இரவுக்காலத்துத்
திருவேள்விக்குடியிலும், தங்கும் முறை பகல் இடம் இரவு இடம் -
இடம் என்ற சொற்கள் காலத்தைக் குறித்தன. நீர் - நீரினாலாகும்
வளத்துக்கானது காரண ஆகுபெயர்.
|