|  
       
         
          | 3778. |  கோங்கமே 
              குரவமே கொழுமலர்ப்              
           |   
          |  | புன்னையே 
            கொகுடிமுல்லை வேங்கையே ஞாழலே விம்முபா
 திரிகளே விரவியெங்கும்
 ஓங்குமா காவிரி வடகரை
 யடைகுரங் காடுதுறை
 வீங்குநீர்ச் சடைமுடி யடிகளா
 ரிடமென விரும்பினாரே.              1
 |       1.பொ-ரை: 
        கோங்கு, குரவம், செழித்த மலர்களைத் தரும் புன்னை, கொகுடி, முல்லை, வேங்கை, புலிநகக் கொன்றை, பாதிரி
 ஆகிய மரங்களை அடித்துவரும் காவிரியின் வடகரையிலுள்ள
 குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தைச் சிவபெருமான் தமது
 இருப்பிடமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளுபவர்.
       கு-ரை: 
        கோங்கமே, குரவமே - கோங்கமும், குரவமும் எனப் பொருள் தரலால் ஏகாரம் எண்ணுப்பொருள். கொகுடி முல்லை -
 முல்லைவகை. விம்மு - பருத்த, பாதிரியாகிய இம்மரங்களை
 அடித்துக்கொண்டு பெருகும் காவிரியின் வடகரையில் உள்ள
 குரங்காடுதுறையைச் சடைமுடி அடிகளார் இடமென விரும்பினார்
 என்க.
 |