3781. |
கறியுமா
மிளகொடு கதலியின் |
|
பலங்களுங்
கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை
யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி
தொழுதெழ மருவுமுள்ளக்
குறியினா ரவர்மிகக் கூடுவார்
நீடுவா னுலகினூடே. 4 |
4.பொ-ரை:
உறைக்கும் மிளகுச் செடிகளோடு, வாழையும்
கலந்து தள்ளி வரும் காவிரியின் வடகரையில் விளங்கும்
குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில் மான்கன்றை ஏந்திய
கையையுடைய சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது, உள்ளம்
உருகப் போற்றுபவர்கள் வானுலகடைந்து மேன்மையுடன்
மகிழ்ந்திருப்பர்.
கு-ரை:
கறியும் - உறைக்கும். மாமிளகு ஒடு - மிக்க மிளகுச்
செடிகளோடு. கறி - கறிப்பு எனவும் வழங்கும். அவரது
மலரடிகளைத் தொழுது எழு எண்ணும் உள்ளக்
குறிக்கோளையுடையவர் என்பது, மலரடி... ... குறியினார் என்பதன்
பொருள். மிகக் கூடுவார் - என்றும் கூடிவாழ்வார்.
|