3784. |
நீலமா
மணிநிறத் தரக்கனை |
|
யிருபது
கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார்
வழிபட மன்னுகோயில்
ஏலமோ டிலையில வங்கமே
யிஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை
யடைகுரங் காடுதுறையே. 8 |
8.
பொ-ரை: நீலமணிபோன்ற கருநிற அரக்கனான
இராவணனை, இருபது கரத்தொடும் வாலினாற் இறுகக் கட்டிய
வாலியார் வழிபடப் பெருமைபெற்ற கோயில், ஏலம், பச்சிலை,
இலவங்கம், இஞ்சி, மஞ்சள் இவற்றை உந்தி, ஒலித்து, ஓடிவரும்
காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
ஒல்க - குழைய, ஒல்கு தீம்பண்டம் (சீவக
சிந்தாமணி - 62) இராவணனை வாலினாற் கட்டிய வாலியார். இலை
- பச்சிலை மரம். குறிப்பு:- எட்டாவது பாடல் மண்ணின் மிசை
வாழ்வார்கள், பிழைத்தாலும் வந்தடையிற் கண்ணுதலோன் தன்
கருணைக் கைக்கொள்ளும் எனக் காட்டவருவது. இப்பதிகத்து
வாலியின் பெருமையோடு படுத்தி இராவணனைக் கூறியமை
பாராட்டத்தக்கது. வாலியார்:- ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவி.
(தொல். சொல். சூ-27)
|