| 
         
          | 3784. | நீலமா 
            மணிநிறத் தரக்கனை |   
          |  | யிருபது 
            கரத்தொடொல்க வாலினாற் கட்டிய வாலியார்
 வழிபட மன்னுகோயில்
 ஏலமோ டிலையில வங்கமே
 யிஞ்சியே மஞ்சளுந்தி
 ஆலியா வருபுனல் வடகரை
 யடைகுரங் காடுதுறையே.              8
 |        8. 
        பொ-ரை: நீலமணிபோன்ற கருநிற அரக்கனான இராவணனை, இருபது கரத்தொடும் வாலினாற் இறுகக் கட்டிய
 வாலியார் வழிபடப் பெருமைபெற்ற கோயில், ஏலம், பச்சிலை,
 இலவங்கம், இஞ்சி, மஞ்சள் இவற்றை உந்தி, ஒலித்து, ஓடிவரும்
 காவிரியின் வடகரையிலுள்ள குரங்காடுதுறை என்னும்
 திருத்தலமாகும்.
       கு-ரை: 
        ஒல்க - குழைய, ஒல்கு தீம்பண்டம் (சீவக சிந்தாமணி - 62) இராவணனை வாலினாற் கட்டிய வாலியார். இலை
 - பச்சிலை மரம். குறிப்பு:- எட்டாவது பாடல் மண்ணின் மிசை
 வாழ்வார்கள், பிழைத்தாலும் வந்தடையிற் கண்ணுதலோன் தன்
 கருணைக் கைக்கொள்ளும் எனக் காட்டவருவது. இப்பதிகத்து
 வாலியின் பெருமையோடு படுத்தி இராவணனைக் கூறியமை
 பாராட்டத்தக்கது. வாலியார்:- ஒருவரைக் கூறும் பன்மைக்கிளவி.
 (தொல். சொல். சூ-27)
 |