3787. |
தாழிளங்
காவிரி வடகரை |
|
யடைகுரங்காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு
சடைமுடிப் புண்ணியனைக்
காழியா னருமறை ஞானசம்
பந்தன கருதுபாடல்
கோழையா வழைப்பினுங் கூடுவார்
நீடுவா னுலகினூடே. 11 |
11.
பொ-ரை: பள்ளம் நோக்கி ஓடிப்பாயும் காவிரியின் வட
கரையிலுள்ள குரங்காடுதுறை என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும், பிறைச்சந்திரனை அணிந்த முறுக்குண்ட
சடைமுடியுடைய புண்ணிய மூர்த்தியான சிவபெருமானைப் போற்றி,
சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய
இப்பாடல்களை அடியவர்கள் கோழைமிடறோடு பாடினாலும் என்றும் அழியாத முக்தியுலகை அடைவர்.
கு-ரை:
தாழ் - ஓடிப் பாய்கின்ற. பள்ளந்தாழுறு புனலில்
(தி.8 திருவாசகம் 25.) இளம் காவிரி (மென்புனலையுடைய காவிரி),
இளந்தென்றல் என்பதுபோல. கருது - தியானித்துப் பயனெய்தத்தக்க
பாடல். கோழையா அழைப்பினும் - கோழைமிடறோடு பாடினாலும்.
கோழைமிடறு பாடற் கேலாதது கோழைமிடறாக கவிகோளும்
இலவாக இசைகூடும் வகையால் எனவரும் திருவைகாவூர்ப்
பதிகத்தாலும் அறிக. (தி.3 ப.71. பா.1.) அழைத்தல் - பாடுதல்.
அழைத்தல் என்பதற்கு மறு சொல் விளித்தல் என்பது. அதன்
பிறிதொரு பொருள் பாடுதல் என்பது. இதனை கொம்பர் இருங்
குயில் விளிப்பன காணாய் (மணிமேகலை - பளிக்கறை புக்க காதை. 13.) நீடு - என்றும்
அழியாத. வானுலகு - முத்தியுலகம்.
|