| 
         
          | 3810. | விண்ணவர் 
            தொழுதெழு வெங்குரு மேவிய |   
          |  | சுண்ணவெண் 
            பொடியணி வீரே சுண்ணவெண் பொடியணி வீரும தொழுகழல்
 எண்ணவல் லாரிட ரிலரே.              1
 |      1. 
        பொ-ரை: தேவர்கள் தொழுது போற்றுகின்ற திருவெங்குரு என்னும் திருத்தலத்தை விரும்பி வீற்றிருந்தருளும், சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை 
        அணிந்துள்ள சிவபெருமானே! சுண்ணம் போன்ற வெண்மையான திருநீற்றினை அணியும் பெருமானாகிய 
        உம்
 தொழத்தக்க திருவடிகளைத் தியானிக்க வல்லவர் துன்பம்
 அற்றவர்கள் ஆவர்.
       கு-ரை: 
        தொழுது எழும் - தொழாநின்று துயில் எழும், சுண்ண வெண் பொடி - சுண்ணம் போன்றதாகிய வெள்ளிய திருநீறு.
 வெங்குரு மேவிய பொடியணிவீரேயென்க. நீறணிந்த கோலம்
 நெஞ்சம் பிணிக்கும் எழிலுடைமையான், அக்கோலம் தொழுது
 எழுவார் உள்ளத்து நீங்காது நிற்றலான் ஆண்டுள்ள வினை நீறு
 ஆம் என்னும் பேராசிரியர் உரை இங்குக் கருதத்தக்கது. தொழு
 கழல் - தொழத்தகும் திருவடி, எண்ணுதல் - தியானித்தல், ஆறு
 கோடிமாயாசத்திகள் வேறு வேறு தம் மாயைகள் தொடங்கித்
 தடுத்தலின் எண்ணுதலும் அரிதென்பர் எண்ணவல்லார், உம -
 உம்முடைய (கழல்கள்).
 |