| 
         
          | 3813. | விண்டலர் 
            பொழிலணி வெங்குரு மேவிய |   
          |  | வண்டமர் 
            வளர்சடை யீரே வண்டமர் வளர்சடை யீருமை வாழ்த்துமத்
 தொண்டர்க டுயர்பிணி யிலரே.         4
 |  
      
             4. 
        பொ-ரை: முறுக்குடைந்து விரிகின்ற மலர்களையுடைய சோலைகளால் அழகுடன் திகழும் திருவெங்குரு என்னும்
 திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும், வண்டுகள் விரும்பும்
 நீண்ட சடையுடைய சிவபெருமானே! வண்டுகள் விரும்பும்
 சடையினையுடைய பெருமானாகிய உம்மை வாழ்த்தும் சிறப்புடைய
 தொண்டர்கள் துயரும், பிணியும் அற்றவர்கள் ஆவர்.
       கு-ரை: 
        விண்டு அலர் - முறுக்குடைந்து மலர்கின்ற (பொழில்), வண்டு அமர்சடை - வண்டு விரும்பும் சடை, எனவே
 மலர்மாலையணிந்த சடையென்பது பெறப் பட்டது. அமர்தல் -
 விரும்புதல், (துயர்பிணி, இலர்) துயர் - உள்ளம் பற்றியது, பிணி -
 உடலம் பற்றியது இலர் - இல்லாதவர் ஆவார்.
 |