| 
         
          | 3817. | வித்தக 
            மறையவர் வெங்குரு மேவிய |   
          |  | மத்தநன் 
            மலர்புனை வீரே மத்தநன் மலர்புனை வீரும தடிதொழுஞ்
 சித்தம துடையவர் திருவே.             8
 |  
      
             8. 
        பொ-ரை: சாமர்த்தியமுடைய, நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் நிறைந்த திருவெங்குரு என்னும் திருத்தலத்தில்
 விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, ஊமத்த நன்மலரினைச் சூடியுள்ள,
 சிவபெருமானே! ஊமத்தம் மலர் சூடிய உம் திருவடிகளைத் தொழும்
 சித்தமுடையவர்கள் எல்லாச் செல்வங்களும் பெற்றவர் ஆவார்.
       கு-ரை: 
        வித்தகம் - சதுரப்பாடு (சாமர்த்தியம்) மறையவர்க்குச் சதுரப் பாடாவது - பல கடவுளர்க்குத் தலைமை கூறும் அதன்
 பொருளை நடு நிலைமையொடு உணர்ந்து, உண்மையிது உபசாரம்
 இது என உணரும் வன்மை. மத்த மலர் - பொன்னூமத்த மலர்.
 சித்தம் உடையவர் திரு - என்றது மோட்ச சாம்ராச்சியத்தை
 செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே என்றவாறு.
 |