| 
         
          | 3819. | விரைமல்கு பொழிலணி வெங்குரு மேவிய |   
          |  | அரைமல்கு 
            புலியத ளீரே அரைமல்கு புலியத ளீரும தடியிணை
 உரைமல்கு புகழவ ருயர்வே.            10
 |  
      
            10. 
        பொ-ரை: நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
 அரையில் கட்டிய புலித்தோல் ஆடையையுடைய சிவபெருமானே!
 அரையில் கட்டிய புலித்தோலாடையையுடைய பெருமானாகிய உம்
 இணையடிகளை நிரம்பிய சொற்களால் புகழ்பவர்களே உயர்வு
 அடைவர்.
       கு-ரை: 
        அரைமல்கு புலியதளீரே - அரையிற் கட்டிய புலித்தோலை உடையீரே. மல்கு - பொருந்திய, இங்குக் கட்டிய
 என்னும் பொருளில் வந்தது. உரைமல்கு புகழவர் - வார்த்தையால்
 உம்மை நிரம்பப் புகழ்தலையுடையவர். அவர் உயர்வே உண்மையான
 உயர்வாகும். குறிப்பு: 
        இப்பதிகத்தில் 8,9,10 இப்பாசுரங்களில் ஏனைப்
 பதிகங்களிற் கூறும் முறை இல்லை.
 |