| 3832.  | 
           நிச்சலு 
            மடியவர் தொழுதெழு நெல்வெணெய்க் | 
         
         
          |   | 
          கச்சிள 
            வரவசைத் தீர 
            கச்சிள வரவசைத் தீருமைக் காண்பவர் 
            அச்சமொ டருவினை யிலரே.                 2 | 
         
       
	  
             2. 
        பொ-ரை: நாள்தோறும் அடியவர்கள் தொழுது எழுகின்ற,  
        நெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி  
        வீற்றிருந்தருளுகின்ற, இளமையான பாம்பைக் கச்சாக இடையில்  
        அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு கச்சாக இளம் பாம்பை  
        அணிந்துள்ள உம்மைத் தரிசிப்பவரே துன்பங்களைக் கண்டு  
        அச்சப்படாதவர், கொடிய வினைகளும் இல்லாதவர்.  
           கு-ரை: 
        நிச்சல் - நித்தல்; நித்தம் நித்தல் என்பதன் போலி,  
        இளஅரவு - இளம்பாம்பைக் கச்சு (ஆக) அசைத்தீரே -  
        கட்டியருளினீரே. என்றும் இளமையுடையவன் ஆகையால்  
        அவனைச்சார்ந்தனவும் இளமையுடையனவே ஆயின, இளநாகமோடு என முன்னும் வந்தமை காண்க. 
        (தி.1. ப.1. பா.2.) காண்பவர் -  
        தரிசிப்பவர்.  
       |