3835. நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
  ஆடிளம் பாப்பசைத் தீர
ஆடிளம் பாப்பசைத் தீருமை யன்பொடு
பாடுள முடையவர் பண்பே.                  5

     5. பொ-ரை: நீண்ட இளமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த
அழகிய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற, ஆடுகின்ற இளம்பாம்பினைக் கச்சாகக்
கட்டியுள்ள சிவபெருமானே! அவ்வாறு ஆடுகின்ற இளம்பாம்பைக்
கச்சாக அணிந்த உம்மை அன்போடு பாடுகின்ற உள்ளம்
உடையவர்களின் பண்பே சிறந்ததாகும்.

     கு-ரை: நீடு - நெடிய, இளம்பொழில் - இளமரச்சோலை,
பாப்பசைத்தீர் - (பாம்பு) அசைத்தீர், கச்சையாகக் கட்டியருளினீர்,
உம்மைப் பாடும் விருப்பமுடையவர் பண்பே, சிறந்த பண்பாவது,
உளம் - இங்கே விருப்பம். இரண்டாம் அடி “ஆடிளம்பாம்பசைத்
தானும்” (தி.4.ப.4.பா.1.) என அப்பர் வாக்கிலும், வருவது