| 
         
          | 3835. | நீடிளம் 
            பொழிலணி நெல்வெணெய் மேவிய |   
          |  | ஆடிளம் 
            பாப்பசைத் தீர ஆடிளம் பாப்பசைத் தீருமை யன்பொடு
 பாடுள முடையவர் பண்பே.                  5
 |        5. 
        பொ-ரை: நீண்ட இளமரங்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில்
 வீற்றிருந்தருளுகின்ற, ஆடுகின்ற இளம்பாம்பினைக் கச்சாகக்
 கட்டியுள்ள சிவபெருமானே! அவ்வாறு ஆடுகின்ற இளம்பாம்பைக்
 கச்சாக அணிந்த உம்மை அன்போடு பாடுகின்ற உள்ளம்
 உடையவர்களின் பண்பே சிறந்ததாகும்.
       கு-ரை: 
        நீடு - நெடிய, இளம்பொழில் - இளமரச்சோலை, பாப்பசைத்தீர் - (பாம்பு) அசைத்தீர், கச்சையாகக் கட்டியருளினீர்,
 உம்மைப் பாடும் விருப்பமுடையவர் பண்பே, சிறந்த பண்பாவது,
 உளம் - இங்கே விருப்பம். இரண்டாம் அடி ஆடிளம்பாம்பசைத்
 தானும் (தி.4.ப.4.பா.1.) என அப்பர் வாக்கிலும், வருவது
 |