| 
         
          | 3836. | நெற்றியோர் 
            கண்ணுடை நெல்வெணெய் மேவிய |   
          |  | பெற்றிகொள் 
            பிறைநுத லீரே பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
 கற்றறி வோர்கள்தங் கடனே.               6
 |  
             6. 
        பொ-ரை: நெற்றிக்கண்ணை உடையவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை
 போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய வருமாகிய
 சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய உமா
 தேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த
 அறிஞர்களின் கடமையாகும்.
       கு-ரை: 
        பெற்றி கொள் - அடியவர்க்கருள்வதையே தன்மையாகக் கொண்ட. பிறைநுதலீர் - பிறைபோன்ற
 நெற்றியையுடைய உமையம்மையாரை. உரையீர், பிறைநுதல் -
 அன்மொழித்தொகை. பேணுதல் - பாராட்டி நிட்டை கூடுதல்,
 கற்றறிவோர்கள் தம் கடன் - ஞான நூல்களைக் கற்றறிந்த
 அறிஞர்கள் கடமையாகும். கல்வியறிவிற்குப் பயன் கூறியவாறு.
 |