3840. |
நீக்கிய
புனலணி நெல்வெணெய் மேவிய |
|
சாக்கியச்
சமண் கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கிய முடையவர் பண்பே. 10 |
10.
பொ-ரை: வறுமை, பிணி முதலியவற்றை நீக்கியவரும்,
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும்,
புத்தமும், சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே! அவ்வாறு
புத்தமும், சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது
புண்ணியம் செய்தவர்களின் பண்பாகும்.
கு-ரை:
நீக்கிய - வறுமை, பிணி முதலியவற்றை நீக்கிய, புனல்
அணி - நீர் வளம் உடைய. நெல் வெண்ணெய் சாக்கியச்சமண் -
சாக்கியரோடு கூடிய சமண். உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது,
பாக்கியம் உடையவர் பண்பு - தவமும் தவ முடையார்க்காகும்,
(குறல். 262) சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது
(சித்தியார். சுபக்கம் சூ.2.91) என்ற கருத்து.
|