| 
         
          | 3840. | நீக்கிய 
            புனலணி நெல்வெணெய் மேவிய |   
          |  | சாக்கியச் 
            சமண் கெடுத் தீரே சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
 பாக்கிய முடையவர் பண்பே.                10
 |  
             10. 
        பொ-ரை: வறுமை, பிணி முதலியவற்றை நீக்கியவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும்,
 புத்தமும், சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே! அவ்வாறு
 புத்தமும், சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது
 புண்ணியம் செய்தவர்களின் பண்பாகும்.
       கு-ரை: 
        நீக்கிய - வறுமை, பிணி முதலியவற்றை நீக்கிய, புனல் அணி - நீர் வளம் உடைய. நெல் வெண்ணெய் சாக்கியச்சமண் -
 சாக்கியரோடு கூடிய சமண். உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது,
 பாக்கியம் உடையவர் பண்பு - தவமும் தவ முடையார்க்காகும்,
 (குறல். 262) சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெறல் அரிது
 (சித்தியார். சுபக்கம் சூ.2.91) என்ற கருத்து.
 |