| 
         
          | 3482. | திடமலி 
            மதிளணி சிறுகுடி மேவிய |   
          |  | படமலி 
            யரவுடை யீரே படமலி யரவுடை யீருமைப் பணிபவர்
 அடைவது மமருல கதுவே.                  
            1
 |          1. 
        பொ-ரை: வலிமைமிக்க மதில்களையுடைய அழகிய திருச்செறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
 படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள சிவபெருமானே! அவ்வாறு
 படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள உம்மை வணங்குபவர்கள்
 சிவலோகம் அடைவர்.
       கு-ரை: 
        திடம் மலி - வலிமைமிக்க. மதிள் - மதில். ல, ள ஒற்றுமை. படம் மலி - படத்தையுடைய, உம்மைப் பணிபவர்
 அடைவது, அமர் உலகு அது - வானவர் உலகிற்கு அப்பாலதாகிய
 சிவலோகமாம். உரையிலடங்காப் பெருமையது ஆகலின் அது என்று
 சுட்டளவோடு நிறுத்தப்பட்டது.
 |