| 
         
          | 3848. | செறிபொழி 
            றழுவிய சிறுகுடி மேவிய |   
          |  | வெறிகமழ் 
            சடைமுடி யீரே வெறிகமழ் சடைமுடி யீருை விரும்பிமெய்ந்
 நெறியுணர் வோருயர்ந்தோரே.               7
 |        7. 
        பொ-ரை: அடர்ந்த சோலைகள் விளங்கும் திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தல் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நறுமணம்
 கமழும் சடைமுடியுடைய சிவபெருமானே! நறுமணம் கமழும்
 சடைமுடியுடைய உம்மை விரும்பி, அடைவதற்குரிய நெறிகளில்
 சன்மார்க்க நெறியில் நிற்போர் உயர்ந்தோராவர்.
       கு-ரை: 
        செறி - அடர்ந்த பொழில். வெறி - வாசனை. மெய்ந்நெறி - உண்மையான மார்க்கம். சன்மார்க்கம் சகமார்க்கம்
 சற்புத்திர மார்க்கம் தாசமார்க்கம் என்று சங்கரனையடையும்
 நன்மார்க்கம் நான்கு எனச் சித்தியாரிற் குறித்தவை. உயர்ந்தோர்
 அவற்றில் உயர்ந்த சன்மார்க்க நெறியில் நிற்போர் ஆவர்.
 |