| 
         
          | 3850. | செருவரை 
            வயலமர் சிறுகுடி மேவிய |   
          |  | இருவர 
            யசைவுசெய் தீரே இருவரை யசைவுசெய் தீருமை யேத்துவார்
 அருவிணை யொடுதுய ரிலரே.               9
 |  
      
             9. 
        பொ-ரை: வயல்வளமிக்க திருச்சிறுகுடி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், மாறுபாடு
 கொண்ட திருமால், பிரமன் இவர்களை வருத்தியவருமான
 சிவபெருமானே! அவ்விருவரையும் வருத்திய உம்மைப் போற்றி
 வழிபடுபவர்கள் நீக்குவதற்குரிய வினையும், அதன் விளைவால்
 உண்டாகும் துன்பமும் இல்லாதவர்கள் ஆவர்.
       கு-ரை: 
        இருவரை - பிரம விட்டுணுக்களை. இருவர் தொகைக் குறிப்பு. அசைவு - வருத்தம். அருவினை என்பது ஆகாமிய சஞ்சித
 கன்மங்களை துயர் என்றது பிராரத்த வினையை. அதனையிலர்
 என்றது, சிவனும் இவன் செய்தியெலாம் என் செய்தியென்றும்
 செய்ததெனக் கிவனக்குச் செய்த தென்றும் கொள்வன்
 ஆகையினால். (சித்தியார் சூ.10.1).
 |