| 
         
          | 3851. | செய்த்தலை 
            புனலணி சிறுகுடி மேவிய |   
          |  | புத்தரோ டமண்புறத் 
              தீரேபுத்தரொ 
              டமண்புறத் தீருமைப் போற்றுதல்
 பத்தர்கள் தம்முடியப் பரிசே.               10
 |         10. 
        பொ-ரை: வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப், புத்தர், சமணர்கட்குப்
 புறம்பாக இருக்கும் சிவபெருமானே! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப்போற்றி 
        வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக்
 கொள்வர்.
       கு-ரை: 
        செய்த்தலை - வயல்களினிடத்து. புனல் - நீர். அணி - அழகு செய்கின்ற. சிறுகுடி புறத்தீர் - அப்பாற் பட்டுரி. உம்மைப்
 போற்றுதலே பத்தர்கள் தம்முடைய பேறு ஆகக்கொள்வர். பரிசு -
 பேறு. கூடும் அன்பினிற் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா
 விறலின் விளங்கினார் (தி.12 திருக்கூட்டச்சிறப்பு.8) என்றதும்
 நோக்குக.
 |