3851. செய்த்தலை புனலணி சிறுகுடி மேவிய
 

புத்தரோ டமண்புறத் தீரே
 புத்தரொ டமண்புறத் தீருமைப் போற்றுதல்
பத்தர்கள் தம்முடியப் பரிசே.               10

     10. பொ-ரை: வயல்களில் நீர்பாயும் அழகிய சிறுகுடி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றவராய்ப், புத்தர், சமணர்கட்குப்
புறம்பாக இருக்கும் சிவபெருமானே! புத்தர் சமணர்கட்குப் புறம்பான உம்மைப்போற்றி வணங்குதலையே பக்தர்கள் தம்முடைய பேறாகக்
கொள்வர்.

     கு-ரை: செய்த்தலை - வயல்களினிடத்து. புனல் - நீர். அணி -
அழகு செய்கின்ற. சிறுகுடி புறத்தீர் - அப்பாற் பட்டுரி. உம்மைப்
போற்றுதலே பத்தர்கள் தம்முடைய பேறு ஆகக்கொள்வர். பரிசு -
பேறு. “கூடும் அன்பினிற் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா
விறலின் விளங்கினார்” (தி.12 திருக்கூட்டச்சிறப்பு.8) என்றதும்
நோக்குக.